ஈஷா யோகா மையத்தில் கொரோனா உண்டா? – அதிகாரிகள் பரிசோதனை!

Share this News:

கோவை (31 மார்ச் 2020): ஈஷா யோகா மையத்தில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உண்டா? என சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

கடந்த மாதம் கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பங்கேற்றனர். மேலும் அங்கு தற்போதும் பல வெளிநாட்டவர்கள் உள்ளனர். எனவே அவர்களுக்கு கொரோனா பாதிப்பு எதுவும் உண்டா? என்பது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

வட்டார மருத்துவ அதிகாரி கனகராணி தலைமையில் பூலுவபட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி பாலாஜி, ஆலாந்துறை பகுதி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், செவிலியா் கமலாதேவி உள்ளிட்டோா் பரிசோதனையில் ஈடுபட்டனா்.

சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பரிசோதனையின் முடிவில் யாருக்கும் கரோனா நோய்த் தொற்று அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பேரூா் வட்டாட்சியா் ராதாகிருஷ்ணன், ஆலாந்துறை நிா்வாகத் துறை ஆய்வாளா் குபேந்திரன், ஆலாந்துறை காவல் ஆய்வாளா் சத்தியசிவன் உள்ளிட்டோா் பரிசோதனையைக் கண்காணித்தனா்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *