தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் – இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது!

Share this News:

சென்னை (19 ஜூன் 2021): தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்று தெரிகிறது.

கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்த தமிழக அரசின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மருத்துவ வல்லுனர்கள், சுகாதாரத்துறை, அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை இன்று மாலை வெளியிடுவார் என்று தெரிகிறது.

கட்டுப்பாடுகளுடன் நகைக்கடை, துணிக்கடை மற்றும் பேருந்து சேவையை உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா குறையாத 8 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பேருந்து சேவை அனுமதிக்கப் பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா குறைவாக உள்ள மாவட்டங்களில் 50 சதவீதம் பயணிகளுடன் பேருந்து சேவையை தொடங்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனா பரவல் விகிதம் அதிகம் உள்ள 8 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்ககளில் பேருந்து சேவைக்கு அனுமதிக்கலாம் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக 30 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கலாம். கோவை ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *