தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கத்தார் அரசு அதிரடி உத்தரவு!

Share this News:

தோஹா (14 ஆக 2021): அரசு அனுமதியின்றி கல்விக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம் என்று கத்தார் கல்வி அமைச்சகம் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் தனியார் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் வசூலிக்கும் கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை உரிமத் துறை கடுமையாக கண்காணித்து வருவதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகத்தின் முன் அனுமதி இல்லாமல் கல்வி குறித்த எந்த கட்டணமும் உயர்த்தப்படக் கூடாது. அவ்வாறு அனுமதியின்றி கட்டங்களை உயர்த்துவது சட்டவிரோதமாக கருதப்படும் என்று கத்தார் கல்வி அமைச்சகம் எச்சரித்துள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *