சவூதியில் இக்காமாவை தவணை முறையில் புதுப்பிக்கும் வசதி அமல்!

Share this News:

ரியாத் (04 நவ 2021): சவூதி அரேபியாவில் தவணை முறையில் இக்காமாவை புதுப்பிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இதன் மூலம் சவூதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், இக்காமா உள்ளிட்ட ஆவணங்களை மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு புதுப்பிக்க முடியும்.

மேலும் தொழிலாளியின் ஸ்பான்சர்ஷிப்பை மாற்றுவதற்கான அனுமதி உட்பட பல்வேறு சேவைகள் அப்ஷர் இணையதளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவில் தற்போது நடைமுறையில் உள்ளது என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களின் லெவியை மாதம் 800 ரியால் வீதம் ஆண்டுக்கு 9600 ரியால் நிறுவனம் செலுத்த வேண்டும்.

ஆனால் தற்போது தவணை முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்பட்டுள்ளது. அதாவது, வேலை அனுமதி மற்றும் லெவியை மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது ஒன்பது மாதங்களுக்கு செலுத்த முடியும். இந்த முடிவு நூற்றுக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட பெரிய நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளியின் ஸ்பான்சர்ஷிப்பை வேறொரு நிறுவனத்திற்கு மாற்றவும் அப்ஷிருக்கு ஒப்புதல் உள்ளது. மேலும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் புதிய சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது.

மின்னணு ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் பள்ளிகளுக்கான பதிவுக்கான இணைப்பும் அப்ஷர் இணையதளத்தில் உள்ளது. சுகாதார தகவல் மற்றும் ஹஜ் மற்றும் உம்ரா அனுமதிகளின் விவரங்களும் இப்போது அப்ஷிரில் கிடைக்கும்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *