ஒரே நகராட்சியில் 22 வார்டுகளில் டெபாசிட் இழந்த பாஜக!

Share this News:

புதுக்கோட்டை (23 பிப் 2022): நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 22 வார்டுகளில் பாஜக டெபாசிட் இழந்துள்ளது.

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 23 வார்டுகளில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டது. இதில் 18வது வார்டு வேட்பாளர் மல்லிகா மட்டும் 428 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் பாரதி வெற்றி பெற்றுள்ளார்.

புதுக்கோட்டை நகராட்சியில், 18வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மல்லிகா மட்டுமே வைப்புத் தொகையை தக்க வைத்துள்ளார். மற்ற 22 பா.ஜ.க வேட்பாளர்களும் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.

23 வேட்பாளர்களில் 100 ஓட்டுகளுக்கு மேல் பெற்றவர்கள் 3 பேர் மட்டுமே உள்ளனர். 50 வாக்குகளுக்குள் பெற்ற பாஜக வேட்பாளர்களே அதிகமாக உள்ளனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *