முதலமைச்சருக்கு நெருக்கடி கொடுத்த தஞ்சை திமுக எம்.பி!

Share this News:

அதிராம்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றிருந்த நிலையில், கட்சித் தலைமை கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் துணை சேர்மன் பதவியை அறிவித்திருந்தது.

அதன்படி, 19 ஆவது வார்டில் வெற்றி பெற்ற தில் நிவாஸ் பேகம் நகராட்சி மன்ற துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்த நிலையில், திமுக நகரச் செயலாளர் குணசேகரனைத் துணைச் சேர்மனாகத் தேர்வு செய்துள்ளதற்கு மாவட்ட எம்.பி S.S.பழனி மாணிக்கம் காரணம் என்று கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஏற்கனவே திமுக தலைமையால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்த பழனி மாணிக்கம் M.P, துணைத் தலைவர் விசயத்தில் தன் சாதிக்காரர் குணசேரனை தேர்ந்தெடுக்கும்படி கட்சி வார்டு உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதால் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளதால் தஞ்சை நகர திமுகவில் பதட்டம் நிலவுகிறது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *