பாதுகாப்பு கோரி அமைச்சர் சேகர்பாபுவின் மகள் காவல்துறையிடம் தஞ்சம்!

Share this News:

பெங்களூரு (08 மார்ச் 2022): காதல் திருமணம் செய்து கொண்ட அமைச்சர் சேகர் பாபுவின் மகள், தந்தையிடம் இருந்து பாதுகாப்பு கோரி பெங்களூர் காவல்துறையிடம் தஞ்சம் அடைந்துள்ளார்..

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. இவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.

இந்நிலையில், இவரது மகள் ஜெயகல்யாணி, சதீஷ்குமார் என்பவரைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை எதிர்த்து காதல் திருணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் தம்பதி நேற்று பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. ஜெயகல்யாணி தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்புக் கோரியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *