கத்தார் - பஹ்ரைன் இடையே கடல் வழி போக்குவரத்து சேவை துவக்கம்!

கத்தார் – பஹ்ரைன் இடையே கடல் வழி போக்குவரத்து சேவை துவக்கம்!

தோஹா (08 நவம்பர் 2025): கத்தார் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கு இடையே, பயணிகளுக்கான கடல் வழி போக்குவரத்து சேவை தொடங்கப் பட்டுள்ளது. இரு நாட்டு மக்களுக்கிடையே இச்செய்தி பரவலான வரவேற்பையும், மகிழ்ச்சியையும் பெற்றுள்ளது. புதிய கடல் மார்க்க பயணத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி கத்தார் நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்ததாவது: ♥  கத்தார் மற்றும் பஹ்ரைனுக்கு இடையேயிலான சுமார் 65 கி.மீ தூரத்தைக் கடக்கும் இச்சேவை பயணிகளுக்கு மட்டுமேயானது. ♥  இது கத்தாரின் வடக்கில் உள்ள அல்-ருவைஸ்…

மேலும்...
வாகனங்களில் குழந்தைகள்: கத்தாரில் கடுமையாகிறது சட்டம்!

வாகனங்களில் குழந்தைகள்: கத்தாரில் கடுமையாகிறது சட்டம்!

தோஹா (04, நவம்பர் 2025): வாகனங்களில் குழந்தைகள் அமர்வது குறித்த சட்டத்தை மீண்டும் நினைவுறுத்தி, கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் (MoI) எச்சரிக்கை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது பெற்றோரின் பொறுப்பு என்பதை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை வாகனத்தின் முன் இருக்கையில் உட்கார அனுமதிப்பது, போக்குவரத்து சட்டத்தின் பிரிவு (55) இல் உள்ள கிளாஸ் (3) படி,  அப்பட்டமான போக்குவரத்து விதி மீறலாகவும், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாகவும் கருதப்படுகிறது என்று…

மேலும்...
எழுபதாயிரம் உயிர்கள் பலி, காஸா நிர்மூலம்: ஹமாஸ் பெற்றுக் கொண்டது என்ன?

எழுபதாயிரம் உயிர்கள் பலி, காஸா நிர்மூலம்: ஹமாஸ் பெற்றுக் கொண்டது என்ன?

காஸா (07 அக் 2025):  கடந்த அக்டோபர் 7, 2023 ஆம் ஆண்டு ஹமாஸ் இஸ்ரேலின்மீது அதிரடியாக பதிலடித் தாக்குதல் நடத்தியதில் 1,400 இஸ்ரேலியர் கொல்லப்பட்டதுடன், 251 பணயக்கைதிகளை பிடித்துச் சென்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதுவரை ஆங்காங்கே இருபது, முப்பது என காஸா நகர மக்களை கொன்று வந்த இஸ்ரேல், அக்டோபர் 7, 2023 நிகழ்வுக்குப் பிறகு காஸாவின் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தி முழுமையான இன அழிப்பில் ஈடுபட்டுக் கொண்டுள்ளது. (அக்.7  நிகழ்வுக்குப்…

மேலும்...
இஸ்ரேலின் இனப்படுகொலையை நிறுத்த ட்ரம்பின் 20 அம்சத் திட்டம் (தமிழில்)

இஸ்ரேலின் இனப்படுகொலையை நிறுத்த ட்ரம்பின் 20 அம்சத் திட்டம்

காஸா (30 செப் 2025): கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காஸா மீது இஸ்ரேல் நிகழ்த்தி வரும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 20 அம்சத் திட்டம் ஒன்றினை அமெரிக்க வெள்ளை மாளிகை திங்களன்று 29 செப்டம்பர் 2025 வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனின் பகுதியான காஸா வாழ் மக்களின் சிறப்பான எதிர்காலத்தை மனதில் கொண்டு இத்திட்டம் இயற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டால், போர் உடனடியாக முடிவுக்கு வரும். இஸ்ரேல்…

மேலும்...

கத்தார் நாட்டு பிரதமரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு!

தோஹா, கத்தார் (29 செப் 2025): தோஹா மீது நிகழ்த்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலுக்காக, கத்தார் நாட்டு பிரதமரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு. இனியொரு முறை இத்தகைய தாக்குதலை கத்தார் மீது ஒருபோதும் நடத்த மாட்டோம் என உறுதியளித்துள்ளார் நெதன்யாஹு. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் கடந்த செப்டம்பர் 09, 2025 அன்று கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. உலகின் பாதுகாப்பான நாடுகளில் முதன்மை…

மேலும்...

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ள 150+ நாடுகள் எவை தெரியுமா?

காஸா (24 செப் 2025): பாலஸ்தீனத்தை தனி நாடாக இதுவரை அங்கீகரித்துள்ள 150+ நாடுகள் எவை தெரியுமா? ஒரு இறையாண்மை கொண்ட தனி நாடாக பாலஸ்தீனம் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.  ஆம். 81 சதவீத உறுப்பினர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் 157 ஐநா உறுப்பு நாடுகளால் இம்முடிவு எட்டப் பட்டுள்ளது. பிரான்ஸ், லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, அன்டோரா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 80வது அமர்வில் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்துள்ளன. தற்போது, ​​பாலஸ்தீன நாடு…

மேலும்...

பாகிஸ்தானுடன் சவுதி பரஸ்பர அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம்!

ரியாத், சவூதி அரேபியா (17 செப் 2025): சவுதி அரேபியாவும் அணுசக்தி வலிமை கொண்ட பாகிஸ்தானும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.  கடந்த புதன்கிழமை 17 செப் 2025 அன்று ரியாத்தில் நடந்த சந்திப்பின் போது, ​​சவுதி நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் இந்த வரலாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: (இந்நேரம்.காம்) சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின்…

மேலும்...
கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல்: வலுக்கும் உலகத் தலைவர்களின் கண்டனங்கள்

கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல்: உலகத் தலைவர்களின் வலுக்கும் கண்டனங்கள்

தோஹா, கத்தார் (10 செப் 2025):  கடந்த செப்டம்பர் 9, 2025 அன்று கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் அத்துமீறி வான்வழி தாக்குதல் நடத்திய சூழலில், இன்று கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) உடன் அலைபேசியில் பேசியுள்ளார் பிரதமர் மோடி. கத்தார் நாட்டுடனான இந்தியாவின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு, ஹமாஸ் அமைப்பின் அலுவலகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலின் கோழைத்தனமான தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிப்பதை…

மேலும்...
கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல்!

கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் வெடிகுண்டுத் தாக்குதல்!

தோஹா (09, செப் 2025): கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.   உலகின் பாதுகாப்பான நாடுகளில் முதன்மை இடத்தைப் பெற்றுள்ள கத்தார், இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. காஸா (பாலஸ்தீன்) மீது இஸ்ரேல் நடத்திவரும் இனப்பேரழிவுக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைக்கான தொடர் முயற்சியில் கத்தார் நாடு ஈடுபட்டு வருகிறது.   இதில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கத்தாரில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உடன்பட மறுத்து வருகிறது. இந் நிலையில், ஹமாஸ்…

மேலும்...

வளைகுடா நாடுகளுக்கு வருகிறது புதிய போக்குவரத்து சட்டம்!

குவைத் (31 ஆகஸ்ட் 2025): வளைகுடா (GCC) நாடுகளில் வாகனங்களில் பயணம் செய்வோருக்கான போக்குவரத்து விதிமுறை மீறல்களை ஒருங்கிணைக்கும் திட்டம் 95% நிறைவடைந்துள்ளது. இதற்கான புதிய போக்குவரத்து சட்டம் பற்றி GCC பொதுச் செயலாளர் ஜாஸிம் முகம்மது அல்-புதைவி அறிவித்துள்ளார். சமீபத்தில் குவைத் நாளிதழான அல் கபாஸ்க்கு இவர் அளித்த நேர்காணலில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் GCC நாடுகளுக்கு இடையே நிகழும் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் உடனடியாக தவறிழைத்தவருக்கு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். (இந்நேரம்.காம்) இதுநாள்…

மேலும்...