ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,578 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு!

துபாய் (22 அக் 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் வியாழக்கிழமை ,578 புதிய கொரோனா வைரஸ்கள் வழக்குக்கள்பதிவாகியுள்ளன. மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 474 ஆனது. . ஐக்கிய அரபு அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 114,483 சோதனைகளை நடத்தியது, இதில் 1,578 புதிய கோவிட வழக்குகளைக் கண்டறிய வழிவகுத்தது. 1,150 பேர் ஒரே நாளில் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை நாட்டில் கண்டறியப்பட்ட மொத்த…

மேலும்...

நவம்பர் 15 முதல் சவுதியில் குளிர்கால கொண்டாட்டம்!

ஜித்தா (20அக் 2020): சவூதி அரேபியாவில் நவம்பர் 15 முதல் குளிர்கால கொண்டாட்டத்திற்கு சவுதி சுற்றுலா ஆணையம் தயாராகி வருகிறது. சவுதியின் 18 இடங்களில் நடத்தப்படும் இந்த குளிர்கால கொண்டாட்டம் நவம்பர் 15 முதல் 2021 ஏப்ரல் 30 வரை பெரிய அளவில் நடைபெறும் என கூறப்படுகிறது. சவூதி கோடைகால கொண்டாட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கா, மதீனா, ஜெட்டா, ரியாத், தைஃப், அல்-கோபர், அல்-அஹ்ஸா, தம்மம், அபா, ஜசான், அல்-பஹா அலுலா,…

மேலும்...

துபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்!

துபாய் (19 அக் 2020): விசா நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் துபாய் வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டினர் துபாய் விமான நிலையத்தில் செய்வதறியாமல் சிக்கித் தவிக்கின்றனர். ஐந்து நாடுகளில் இருந்து துபாய் செல்லும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறைகளை செயல்படுத்துமாறு விமான மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.. துபாய் விமான நிலைய அதிகாரிகளின் சமீபத்திய அறிவுறுத்தல்களின்படி, பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து வருகை மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் துபாய் சர்வதேச…

மேலும்...

ஏழு மாதங்களுக்குப் பிறகு புனித மக்கா பெரிய மசூதிக்குள் பொதுமக்கள் தொழுகைக்கு அனுமதி!

மக்கா (18 அக் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏழு மாதங்களுக்குப் பிறகு புனித மக்காவிற்குள் சவூதி மற்றும் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர் இன்று (18 அக்டோபர் 2020) சில விதிமுறைகளின் அடிப்படையிலும் தளர்வுகள் அடிப்படையிலும் அனுமதிக்கப் பட்டனர். ஏற்கனவே அறிவித்தபடி இன்று நடைமுறைக்கு வந்த படிப்படியான திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மக்காவிற் கு ஒரு நாளைக்கு சுமார் 40,000 வழிபாட்டாளர்கள் மற்றும் 15,000 உம்ரா யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே…

மேலும்...

துபாய் வரும் இந்தியா உள்ளிட்ட ஐந்து நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை!

துபாய் (17 அக் 2020): ஐந்து நாடுகளில் இருந்து துபாய் செல்லும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறைகளை செயல்படுத்துமாறு விமான மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன . துபாய் விமான நிலைய அதிகாரிகளின் சமீபத்திய அறிவுறுத்தல்களின்படி, பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து வருகை மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் துபாய் சர்வதேச விமான நிலையம் வரும்போது திரும்பிச் செல்லும் வகையில் உள்ள விமான டிக்கெட் வைத்திருக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத பயணிகள் புறப்பட்ட…

மேலும்...

புனித மக்காவில் உம்ரா யாத்திரைக்கு வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அனுமதி!

மக்கா (02 அக் 2020): வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் மக்காவிற்கு உம்ரா யாத்திரீகர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சவுதி அரேபியாவின் புகழ்பெற்ற மக்கா தலத்திற்கு யாத்ரீகர்கள் வரத் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஏழு மாதங்களாக இந்த தடை அமலில் இருந்து வரும் நிலையில், அக்டோபர் 4ஆம் தேதி முதல் மீண்டும் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவிருக்கிறது. மூன்று கட்டங்களாக யாத்ரீகர்களுக்கு தடை விலக்கப்படவிருக்கிறது. முதல் கட்டமாக சவுதி அரேபிய குடிமக்கள்…

மேலும்...

இஸ்ரேலின் அராஜகம் முடிவுறாமல் அமைதி இல்லை – கத்தர்!

ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு முடிவு வராமல் அரபு பிரதேசத்தில் அமைதி திரும்புவதற்கு வாய்ப்பேயில்லை என ஐக்கிய நாடுகள் சபையில் கத்தர் அமீர் தமீம் பின் ஹமது அல்தானி கூறியுள்ளார். நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது பொதுசபை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட கத்தர் அமீர், அரபு பிரதேசத்தில் இஸ்ரேல் நடத்தும் அராஜகங்களுக்கு முடிவு கொண்டு வரும் விசயத்தில் சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபை முதலான சர்வதேச நிறுவனங்களும் கண்மூடி இருப்பதற்குக் கண்டனம்…

மேலும்...

இந்தியன் சோசியல் ஃபோரம் நடத்திய சவூதிவாழ் இந்திய பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி!

ஜித்தா (18 செப் 2020): சவூதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் இந்திய தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு ‘திறனை மேம்படுத்துவோம்’ என்ற தொடர் பயிற்சியை மேற்கு மாகாணம் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் தமிழ் பிரிவு ஜும் காணொளி மூலம் துவக்கியது . உலகளாவிய கொடிய கொரோனா (கோவிட் 19) நோய் தொற்று ஒவ்வொருவரின் வாழ்வாதாரத்தையும் தொழில்துறையையும் மிகப்பெரியளவில் பாதித்துள்ளது. வேலை இழப்பு மற்றும் சம்பள குறைப்பு என பல பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியுள்ள சூழலில், சமூக அக்கறையுடன்…

மேலும்...

25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்!

ரியாத் (03 செப் 2020) சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் மூலம் தனது விமானங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகளுக்கு ஏழு நிபந்தனைகளை விதித்துள்ளது, 25 நாடுகளிலிருந்து சவூதி திரும்புபவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சவூதி சுகாதார அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு சவூதி அரேபியன் விமான நிறுவனம் பயணிகளுக்கு உத்தரவு பிறப்பித்ட்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஓமான், பஹ்ரைன், எகிப்து, லெபனான், மொராக்கோ, துனிசியா, சீனா, யுனைடெட் கிங்டம், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ்,…

மேலும்...

செப்டம்பர் 2020 க்குள் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி – கத்தார் அரசு உத்தரவு!

தோஹா (18 ஆக 2020): வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் பருவகால காய்ச்சலுக்கான இலவசத் தடுப்பூசி மற்றும் அடுத்த சில மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி இடப்படும் என்று கத்தார் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவை நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் இலவசமாக வழங்கப்படும் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஷேக் முகமது பின் ஹமத் அல்தானி, தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், கோவிட்-19…

மேலும்...