ஜெலட்டின் குண்டு வெடித்து சிறுவன் பலி – திருச்சி அருகே பயங்கரம்!

திருச்சி (11 ஜூன் 2020): திருச்சி அருகே ஜெலட்டின் குச்சியை தின்பண்டம் என நினைத்து கடித்த சிறுவன் அது வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அலகரைப் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி மகன் விஷ்னுதேவ்(6). பூபதியின் அண்ணன் கங்காதரன். இந்நிலையில் கங்காதரன் வீட்டுக்கு பூபதி மற்றும் விஷ்னுதேவ் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு ஜெலட்டின் குச்சி இருந்ததை பார்த்த விஷ்னு தேவ் அதனை ஏதோ தின்பண்டம் என நினைத்து கடித்துள்ளார். அது வெடித்து வாய் சிதறி…

மேலும்...

தொடரும் கொரோனா அறிகுறி இல்லா மரணங்கள் – அதிர்ச்சியில் தமிழக மக்கள்!

சென்னை (10 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று மட்டும் 1927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா அறிகுறி எதுவும் இல்லா மரணங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும், அரசு மருத்துவமனையிலிருந்து 12 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் தகவல்கள் மிகவும்…

மேலும்...

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி: முதல்வர் உத்தரவு!

சென்னை (10 ஜூன் 2020): தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி, தொற்று இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், மருத்துவர்களின் பணிக்காலத்தை நீட்டித்தும், கூடுதல் மருத்துவர்களை பணி அமர்த்தியும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக புதிதாக 1,239 மருத்துவர்கள் உள்பட 2,834 மருத்துவ பணியாளர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்….

மேலும்...

காங்கிரஸ் கடசியின் முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்!

சென்னை (10 ஜூன் 2020): காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவும் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் மாநிலத் தலைவருமான ஜி.காளான் உடல்நலக்குறைவு காரணமாக இன்று பிற்பகல் காலமானார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தமிழக தலைவர் திரு ஜி.காளான் அவர்கள் காலமான செய்திகேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரான இவர் பதினாறு ஆண்டுகள் தமிழக ஐ.என்.டி.யு.சி.யின் தலைவராக செயல்பட்டு…

மேலும்...

சென்னையில் இதுவரை ஐந்து கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்!

சென்னை (10 ஜூன் 2020): சென்னையில் ஏற்கனவே நான்கு கொரோனா நோயாளிகள் தப்பியோடிய நிலையில் தண்டையார் பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சென்னை காசிமேடு சிறுவர் காப்பகத்தில் தங்கியிருந்த 35 சிறுவர்களுக்கு, கடந்த 7-ம் தேதி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கிருந்து, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவர் தப்பியோடியுள்ளார். ஏற்கனவே, சென்னை ராஜீவ் காந்தி…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ மரணம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!

சென்னை (10 ஜூன் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜெ.அன்பழகன் இறந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். ஜெ.அன்பழகனின் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த இயக்கத்திற்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...

திமுக எம்.எல்.ஏ மரணம் – ஜவாஹிருல்லா இரங்கல்!

சென்னை (10 ஜூன் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வின் தென்சென்னை மாவட்டச் செயலாளராக சீரிய முறையில் பணியாற்றிய திருவல்லிக்கேணி – சேப்பாக்கம்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் காலமானார்!

சென்னை (10 ஜுன் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 2ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெ.அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது….

மேலும்...

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!

சென்னை (09 ஜூன் 2020): எதிர் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து பத்தாம் வகுப்பு மற்றும் 11 வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதா? அல்லது தேர்வு…

மேலும்...

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் இருமல் – பரபரப்பில் திமுகவினர்!

சென்னை (08 ஜூன் 2020): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருமல் இருந்ததால் கொரோனா அறிகுறியாக இருக்குமோ என அவரது உறவினர்களும் திமுகவினரும் பதற்றத்தில் காணப்பட்டனர். திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவைரஸ் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின், மிகுந்த வருத்ததில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி ஸ்டாலினுக்கு திடீரென தொடர்ந்து இருமலும், லேசான காய்ச்சலும் இருந்துள்ளது. தொடர் இருமல், காய்ச்சல் இருந்தால்…

மேலும்...