தமிமுன் அன்சாரி எம்எல்ஏ திமுகவுக்கு ஆதரவு!

சென்னை (11 மார்ச் 2021): மனித நேய ஜனநாயக கட்சி திமுகவுக்கு ஆதவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்குத் தலா 6 சட்டமன்றத் தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும், ஆதி தமிழர்…

மேலும்...

மனித நேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம்!

சென்னை (09 மார்ச் 2021): வரும் சட்டமன்ற 2 தொகுதிகளில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் ஒரு தொகுதியில் ‘கத்தரிக்கோல்’ சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலும் அக்கட்சி போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும்...

அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேமுதிக!

சென்னை (09 மார்ச் 2021): அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இதுகுறித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும்...

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் எச்.விஜய் வசந்த் போட்டி?

சென்னை (05 மார்ச் 2021): கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட எச்.விஜய் வசந்த் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எச்.வசந்த்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்த்குமார் உயிரிழந்தார். இதனையடுத்து, கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி…

மேலும்...

மக்கள் நீதி மய்யத்துடன் இணையும் காங்கிரஸ்?

சென்னை (04 பிப் 2021): திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் காங்கிரஸ் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரசுக்கு 20 இடங்கள் வழங்கப்படலாம் என்ற நிலையில் காங்கிரஸ் அதற்கு சம்மதிக்கவில்லை. விசிக 6 இடங்களை பெற்றுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்…

மேலும்...

உடைகிறதா திமுக காங்கிரஸ் கூட்டணி?

சென்னை (03 மார்ச் 2021): தமிழக அரசியல் களம் பரபரப்பான நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என கருத்து கேட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு குறைவான இடங்களே ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் ராகுல் காந்தி அதிருப்தியில் உள்ளார். மேலும் க்கள் நீதி மய்யத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவை ராகுலை டென்ஷனாக்கியுள்ளது. மேலும் “கடந்த முறை போட்டியிட்ட 41 தொகுதிகளுக்குக் குறைவாக போட்டியிட…

மேலும்...

அமித்ஷாவின் அதிரடி திட்டம் – அப்செட்டில் எடப்பாடி!

சென்னை (02 மார்ச் 2021): அதிமுகவுடன் சசிகலா இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக விரும்புவதாகவும் இதனால் எடப்பாடி அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கிய எடப்பாடி, பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கி பாமகவின் கூட்டணியை உறுதிசெய்துள்ளார். அதுபோலவே, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. பாஜகவுக்கு 22 அல்லது…

மேலும்...

மாணவர்களுடன் ஆட்டம் போட்ட ராகுல் காந்தி!

சென்னை (01 மார்ச் 2021): காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மாணவர்களுடன் குதூகலமாக ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ராகுல் காந்தி தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபாட்டுள்ளார். அப்போது மாணவர்களுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ராகுல் காந்தி மாணவர்களுடன் நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முலகுமூடு புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் ராகுல் காந்தி…

மேலும்...

மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட குஷ்பூ!

சென்னை (28 பிப் 2021): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நடிகை குஷ்பூ மன்னிப்பு கோரியுள்ளார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பூ  முன்பு காங்கிரசில்  இருந்தபோது, சமூக ஊடகத்தில், பா.ஜ., தலைவர்களை அவர் விமர்சனம் செய்திருக்கிறார். தற்போது பாஜகவில் இணைந்ததும்  பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் அவர் சமீபத்தில் சந்தித்த தலைவர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். சென்னை வந்த நிர்மலாவை போய் பார்த்தார். அப்போது டிவிட்டரில் நிர்மலா சீதாராமனை விமர்சித்ததற்காக மன்னிப்பு…

மேலும்...

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

சென்னை (27 பிப் 2021): தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் உள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 287 ஆண்கள், 194 பெண்கள் என மொத்தம் 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று உயருகிறது. அதிகபட்சமாக சென்னையில்…

மேலும்...