காங்கிரஸும் கம்யூனிஸ்டும் இணைய வேண்டும் – கம்யூனிஸ்ட் தலைவர் அதிரடி!

Share this News:

தோஹா (10 மார்ச் 2023): எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே, அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், தேசிய மகளிர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஆனி ராஜா கூறினார்.

யுவ கலாசாஹிதி 17வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அனி ராஜா தோஹா வந்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸை ஒதுக்கி வைத்துக்கொண்டு பாஜகவை எதிர்கொள்ள முடியாது. பிராந்தியக் கட்சிகளும், தேசிய அளவில் பலம் வாய்ந்த காங்கிரஸும் ஒன்றுபட்டால் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள முடியும்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் குவிந்துள்ள பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைந்து சங்க பரிவாரை எதிர்க்க வேண்டும். உள்ளூர் கட்சிகளுக்கு அவர்களின் சொந்த நலன்கள் உள்ளன. எனினும் தேச நலன் கருதி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஆனி ராஜா கூறினார்.

ஆட்சியாளர்களை விமர்சிக்காமல் இருப்பது தவறான நடைமுறை என்றும், அரசுக்கு எதிரான விமர்சனம் என்பது ஆட்சியாளர்களை மோசமாக சித்தரிப்பதற்காக அல்ல என்றும் அவர்களை சீர்படுத்தவே அது உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினர்.

இடதுசாரி செயற்பாட்டாளரான தாம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையில் அரசை விமர்சிப்பதாகவும், அவர் கூறினார். கம்யூனிஸ்ட் கட்சி கால்த்திற்கு ஏற்ப மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *