இந்தியாவில் இரண்டு கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் சவூதியில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம்!

Share this News:

ரியாத் (04 டிச 2021): இந்தியாவில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு சவுதி அரேபியாவுக்கு வந்தவர்களுக்கு சவூதி அரேபியாவில் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது.

சவூதியில் தடுப்பூசியைப் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு, பூஸ்டர் டோஸ் இப்போது பெற்றுக் கொள்ளலாம். இதற்கு செஹாத்தி செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல இந்தியாவிலிருந்து இரண்டு டோஸ் கோவ்ஷீல்டுகளைப் பெற்று தடுப்பூசி சான்றிதழுக்காக சவுதி சுகாதார அமைச்சகத்தில் பதிவு செய்துள்ள அனைவரும் செஹாத்தி செயலி மூலம் பூஸ்டர் டோஸுக்கு விண்ணப்பிக்கலாம்.

செஹாத்தி செயலியைத் திறந்த பிறகு, கோவிட் 19 தடுப்பூசி பகுதியைத் திறந்து முதல் டோஸ் மற்றும் பெறப்பட்ட இரண்டாவது டோஸ் பற்றிய விவரங்களைக் கண்டறியலாம். அதற்குக் கீழே, பூஸ்டர் டோஸ் பெறத் தகுதியுடையவர்கள் பகுதியில் முன்பதிவு செய்வதற்கான இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம்

இரண்டாவது டோஸ் எடுத்து ஆறு மாதங்கள் ஆகாதவர்கள் முன்பதிவு தொடங்கும் தேதியையும் தெரிந்து கொள்ளலாம். இரண்டாவது டோஸைப் பெற்ற பிறகு பூஸ்டர் டோஸ் எடுக்காத எட்டு மாதங்களுக்குப் பிறகு தவக்கால் அதன் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கும் என்று உள்துறை அமைச்சகம் நேற்று கூறியிருந்தது. பிப்ரவரி 1 முதல், பூஸ்டர் டோஸ் எடுக்காதவர்கள் வேலை செய்ய தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *