குவைத்தில் பால் விலை உயர்கிறதா? – அமைச்சகம் விளக்கம்!

Share this News:

குவைத் (09 ஜன 2023): குவைத்தில் பால் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என கைத்தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், சந்தையில் விலையை சரிபார்க்க தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பால் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என்றும், பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான விண்ணப்பத்தை அல் மராய் நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை என குவைத் கைத்தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அல் மராய் நிறுவனம் விண்ணப்பம் செய்தால் அமைச்சகம் அதனை நிராகரிக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும் சட்டவிரோதமாக விலையை உயர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *