விஸ்வரூபமெடுக்கும் ராமர் கோவில் நில பேர ஊழல் – மோடி விளக்கமளிக்க சாதுக்கள் கோரிக்கை!
புதுடெல்லி (26 ஜூன் 2021): அயோத்தி ராமர் கோவில் நில பேர ஊழல் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று சாதுக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராமர் கோயிலுக்காக அயோத்தி நிலத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு நிலம் வாங்கியதில் தான் தற்போது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரே நாளிலேயே ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் ரூ.18 கோடிக்கு கைமாற்றப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை சிபிஐ…