
கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட பேஸ்புக் இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்!
புதுடெல்லி (14 ஆக 2021): கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட 300 க்கும் அதிகமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது. கொரோனா தடுப்பூசிகளான அஸ்ட்ரா செனெகா மற்றும் ஃபைசருக்கு எதிராகவும், அவை மனிதர்களை சிம்பன்ஸிகளாக மாற்றும் என்று கூறி பேஸ்புக்குகளில் சிலர் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர். இதன் பின்னணியில் ரஷ்யாவின் ஒரு குழு செயல்பட்டு வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. முக்கியமாக இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவில் உள்ள மக்களிடையே…