முன்னரே வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் – ஆம்புலன்ஸ் தாமதத்தால் உயிரிழந்த முதியவர்!

பெங்களுரு (06 ஜூலை 2020): பெங்களுரில் ஆம்புலன்ஸ் பல மணிநேரங்கள் தாமதமாக வந்ததால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களுரு, ஹனுமந்த் நகரைச் சேர்ந்த 65 வயதான முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார்.அவருக்கு கொரோனா உறுதியானதும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காலையிலிருந்து குடும்பத்தினர் முயற்சித்தும் ஆம்புலன்ஸ் வராமல் மாலை 7 மணிக்கு வந்துள்ளது. அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்ல சில தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால்…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 4280 பேர் கொரோனாவால் பாதிப்பு!

சென்னை (06 ஜூலை 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளன. சென்னையில் ஆயிரத்து 842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து ஒன்றாகவும், சென்னையில் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 538 ஆகவும் அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் 352 பேருக்கும், அதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் 251…

மேலும்...

கொரோனா தடுப்பூசிக்கு குறைந்தது 6 மாதங்களுக்கு மேலாகும் – அறிவியல் நிபுணர் தகவல்!

புதுடெல்லி (05 ஜூலை 2020): கோவிட்-19 (கொரோனா) தடுப்பூசி சோதனைகளை முடிக்க குறைந்தது 6 முதல் 9 மாதங்கள் தேவை என உலக சுகாதார நிறுவன தலைமை அறிவியல் நிபுணர் சௌமியா சுவாமிநாதன் தகவல் தெரிவித்துள்ளார். இந்திய நிறுவனங்கள் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியல் நிபுணர் சௌமியா சுவாமிநாதனிடம் ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது. அந்த கேள்விக்கு உரிய பதிலை ஈமெயில் மூலம் சௌமியா சுவாமிநாதன் அனுப்பியுள்ளார். அதில்,…

மேலும்...

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தின் கண்டுபிடிப்பாளர் யார் தெரியுமா?

ஐதராபாத் (05 ஜூலை 2020): இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்தை (கோவாக்சின்) கண்டுபிடித்த கிருஷ்ணா எல்லா என்பவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தை நிறுவியர் கிருஷ்ணா எல்லா. இவர் ஒரு தமிழர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி அருகே நெமிலி என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவராகும். இவரது பாரத் பயோடெக்’ நிறுவனம் உலகில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கும், ‘கோவாக்சின்’ எனும் தடுப்பூசி கண்டுபிடித்து,…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு அதிர வைக்கும்வகையில் அதிகரிப்பு!

புதுடெல்லி (05 ஜூலை 2020): இந்தியாவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 24,850 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன. இந்நிலையில் நேற்று(ஜூலை 4) ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 6,73,165 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 613 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 19,268 ஆக…

மேலும்...

கொரோனா பாதிப்பால் சென்னைக்கு நிகரான மதுரை!

சென்னை (04 ஜூலை 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தபடியே உள்ளன. உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனாவால் இந்தியாவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, சென்னை உள்ளிட்ட தலைநகரங்கள் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடீயாக மதுரை அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. கொரோனா பாதிப்பு துவங்கி 100 நாளை கடந்துவிட்டது. ஆனால் மதுரையில் வைரஸின் பரவல் வேகம் ஜூன் பாதியில் தான்…

மேலும்...

மும்பைக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

மும்பை (04 ஜூலை 2020): கொரொனாவால் மகாராஷ்டிர பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வானிலை மைய்யம் அறிவிப்பால் பீதியில் உள்ளனர் மும்பை மக்கள். மும்பை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று பலத்தமழை பெய்ததால் பல பகுதிகளில் தண்ணீர் புரண்டு ஓடியது. இதனால் மக்கள் பலர் அவதிக்குள்ளாகினர். இதில் தாதர், மாட்டுங்கா, வோர்லி, லால்பாக், கிங் சர்கிள், சியன், குர்லா, அந்தேரி உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது. இதனால் அந்தேரி சுரங்க பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனை…

மேலும்...

மணமகன் மரணம் – திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா தொற்று!

பாட்னா (30 ஜூன் 2020): பீகாரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பீஹாரில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் கொரோனா அறிகுறியுடன் இருந்த புது மாப்பிள்ளை உயிரிழந்தார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பீஹார் தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் ஜூன் 15ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த இரண்டு…

மேலும்...

கொரோனா நடவடிக்கை என்ற பெயரில் காயல் பட்டினம் முஸ்லிம் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

தூத்துக்குடி (29 ஜூன் 2020): சாத்தான்குளம் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தூத்துக்குடியில் போலீசாரின் அடக்குமுறையால் அடுத்த அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூன் 9ம் தேதியன்று காயல்பட்டினம் குத்துக்கல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதி வழியாக, ஹபீப் முஹம்மது என்ற முஸ்லிம் இளைஞர் முகக்கவசம் அணியாமல் சென்றிருக்கிறார். அதன் காரணமாக ஹபீப்பை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற ஆறுமுகநேரி போலிஸார் அவரை கடுமையான முறையில் சித்திரவதை செய்து தாக்குதலுக்கு ஆளாக்கியுள்ளார்கள். இதனால் படுகாயம்…

மேலும்...

சென்னை மாநகராட்சியின் அதிரடி உத்தரவு!

சென்னை (29 ஜுன் 2020): சென்னையில் ஒருவருக்கு கொரோனா உறுதியானால் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ” பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இனி வரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்கள், பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவரது வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்று…

மேலும்...