கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த ஒன்றிய அரசின் முரண்பட்ட தகவல்கள்!

புதுடெல்லி (17 ஜூன் 2021): ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனீகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்தியாவில், சீரம் இன்ஸ்ட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் கோவிஷீல்டு என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளியை 6-8 வாரங்களில் இருந்து 12 வாரம் முதல் 16 வாரங்கள் வரை நீட்டிக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. இரண்டாவது டோஸ் 12-16 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால்…

மேலும்...

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட முதல் மரணம் – உறுதி செய்தது அரசு!

புதுடெல்லி (15 ஜூன் 2021): இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை எடுத்த ஒருவர் உயிரிழந்ததை அரசு உறுதி செய்துள்ளது. இதனை தடுப்பூசி பக்க விளைவுகளைப் பற்றி ஆய்வு செய்த குழு உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 8 ஆம் தேதி  கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்த 68 வயதான ஒருவர் அனாபிலாக்ஸிஸ் காரணமாக இறந்தார் என்று இதுகுறித்த அறிக்கை காட்டுகிறது. “நாங்கள் கண்ட முதல் மரணம் இதுதான், விசாரணையின் பின்னர் இறந்ததற்கான காரணம் தடுப்பூசிக்குப் பிறகு அனாபிலாக்ஸிஸ்…

மேலும்...

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டலே அதிக பாதுகாப்பு!

புதுடெல்லி (15 ஜூன் 2021): தொற்றில் இருந்து மீண்டவர்கள் ஒரு டோஸ் போட்டுக்கொண்டாலே அதிக பாதுகாப்புடன் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கு முன்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம், நடத்திய ஆய்வில், அவர்களுக்கு, ஒரு டோஸ் தடுப்பூசி கொடுக்கப்பட்டதிலேயே, நிறைய ஆன்டிபாடிகள் உடலில் உற்பத்தி செய்யப்பட்டன என்று ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. அதேசமயம் தொற்று ஏற்படாதவர்களில், ஆன்டிபாடிகள் குறைவாகவே இருந்தன. கோவிட்டால் பாதிக்கப்படுகையில், உடல் அதை எதிர்த்துப் போராடுவதற்கு ஆன்டிபாடி என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை…

மேலும்...

ஒரு பக்கம் மகிழ்ச்சி ஆனால் இன்னொரு பக்கம் கவலை!

புதுடெல்லி (14 ஜூன் 2021); இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ள விவகாரம் மகிழ்ச்சியை தந்தாலும் தொற்று காரணமாக பலி எண்ணிக்கை கவலை அளிக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 72 நாட்களில் இல்லாத குறைந்த அளவாக புதிதாக 70 ஆயிரத்து 421 பேர் கொரோனா பாதிப்புக்கு…

மேலும்...

கும்பமேளாவில் பொய்யாக நடந்த கொரோனா பரிசோதனை!

புதுடெல்லி (13 ஜூன் 2021): உத்தரகாண்டில் கும்பமேளாவின் போது பொய்யான கொரோனா ரிப்போர்ட்கள் சமர்பிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. ஹரித்வார், டேராடூன், டெஹ்ரி, பவுரி ஆகிய மாவட்டங்களில் கும்பமேளா நடத்தப்பட்டது. வடஇந்தியாவில் பல லட்சம் பேர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக நாடு முழுக்க கொரோனா பரவியதாக புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில் உத்தரகாண்டில் கும்பமேளாவின் போது பொய்யான கொரோனா ரிப்போர்ட்கள் சமர்பிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பஞ்சாப்பை சேர்ந்த கும்பளேவில் கலந்து கொள்ளாத…

மேலும்...

இந்தியாவில் கொரோனாவிற்கு மேலும் ஒரு கோவில்!

பிரதாப்கர்(12 ஜூன் 2021): இந்தியாவில் கொரோனாவிற்கு மேலும் ஒரு கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்துவருகிறது. இதற்கிடையே அண்மையில் கோயம்புத்தூரில் கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க வேண்டி, கொரோனா தேவி சிலை எழுப்பப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. கேரளாவிலும் ஒருவர் கொரோனா தேவிக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்திவருகிறார். இந்தநிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தின் சுக்லாப்பூர் கிராம மக்கள், ஒரு வேப்ப மரத்தின் கீழ் கொரோனா மாதாவிற்கு கோவில் கட்டியுள்ளனர். உள்ளூர் மக்களிடம் பணம் வசூலித்து…

மேலும்...

இதிலும் கேரளாதான் முதலிடம்!

புதுடெல்லி (10 ஜூன் 2021): கேரளாவும், மேற்கு வங்கமும் கோவிட் தடுப்பூசி மருந்துகளை வீணடிக்காமல் முழுவதுமாக பயன்படுத்தி உள்ளன. கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரே ஒரு தீர்வு. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால், தடுப்பூசி திட்டம் தொய்வடைந்து உள்ளது. இந்த நிலையில், மாநில அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டது மற்றும் வீணடிக்கப்பட்ட அளவு குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் படி, கடந்த மே மாதத்தில் கேரளாவும், மேற்கு வங்கமும் தடுப்பூசி மருந்துகளை…

மேலும்...

இந்தியாவில் ஒரேநாளில் உச்சத்தை தொட்ட கொரோனா மரணம்!

புதுடெல்லி (10 ஜூன் 2021); இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ள போதிலும் கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 6,148 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மூன்றாவது நாளாக நேற்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 94 ஆயிரத்து 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 91 லட்சத்து…

மேலும்...

இந்தியாவில் கோவ்ஷீல்ட் தடுப்பூசி போடுபவர்களுக்கு சவூதி வர அனுமதி!

ரியாத் (07 ஜூன் 2021): இந்தியாவில் கோவ்ஷீல்ட் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போடுபவர்கள் சவுதி வரும்போது தனிமைப்படுத்தல் விலக்கு அளிக்க சவூதி அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சவூதி இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் விநியோகிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசி சவூதி அரேபியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போன்றது. தடுப்பூசி போடுவதற்காக இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வருபவர்கள் முகீம் போர்ட்டலில் தடுப்பூசி குறித்த தகவல்களை வழங்க வேண்டும்….

மேலும்...

சிறந்த கொரோனா தடுப்பூசி எது? – ஆய்வு தகவல்!

புதுடெல்லி (07 ஜூன் 2021): இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியில் கோவாக்சினை விட கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்களப் பணியாளர்கள் உள்பட பலகோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஒரு நல்ல பாதுகாப்பு அளிப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. பெரிய அளவில், தடுப்பூசிகள் செயல்படுகின்றன என்பதை ஆய்வு காட்டுகிறது. தடுப்பூசிகளின்…

மேலும்...