தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா!

Share this News:

சென்னை (23 மார்ச் 2021): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், 4 வது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இன்று (மார்ச்.,22) 1385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 8.47 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.சென்னை,கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவள்ளூர் பகுதியில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று மட்டும் 659 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 47 ஆயிரத்து 139 ஆக உள்ளது.இன்று மட்டும் கொரோனா பாதித்த 10 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் 5 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,609 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 8,619 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *