நவம்பர் 30 வரை பட்டாசு வெடிக்கத் தடை!

Share this News:

புதுடெல்லி (06 நவ 2020): டெல்லியில் காற்று மாசு மற்றும் பண்டிகை சீசன்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும், அதனால் பட்டாசுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாகவும் முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.

இந்நிலையில், நாளை முதல் நவம்பர் 30ம் தேதி வரை டெல்லியில் அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தார். தடை விதிக்கப்பட்டிருப்பதால் டெல்லியில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும்

இதுபற்றி அமைச்சர் கூறுகையில், ‘கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கான 7231 படுக்கைகள் நிரம்பி உள்ளன. இன்னும் 8572 படுக்கைகள் காலியாக உள்ளன. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளை மேலும் அதிரிக்க உள்ளோம். மேலும், தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகளை அதிகரிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *