திருச்சி CAA எதிர்ப்பு பேரணிக்கு முஸ்லிம் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை – திருமாவளவன் அறிவிப்பு!

Share this News:

திருச்சி (19 பிப் 2020): விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி தேசம் காப்போம் பேரணி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்பு போலீஸ் அனுமதி கிடைக்காத நிலையில் தற்போது அனுமதி கிடைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த பேரணி பிற்பகல் 2 மணிக்கு மாற்றப்படுள்ளதாக தெரிவித்த திருமாவளவன், இப்பேரணியில் பங்கேற்க தோழமை கட்சிகளுக்கோ, இஸ்லாமிய அமைப்புகளுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் முழுமையக விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேரணிக்கு வருபவர்கள், சிஏஏ மற்றும் மதத்தால் மக்களை பிளவு படுத்தாதே போன்ற பதாகைகளை கொண்டு வரவும், ஒரே சீருடை வாய்ப்பை ஏற்படுத்தி வரவும் அறிவிப்பு செய்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *