ஏழு தமிழர்கள் – இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி அமைச்சர் ரகுபதியிடம் மனு!

Share this News:

சென்னை (03 ஜுலை 2021): ஏழு தமிழர்கள், இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் மற்றும் வீரப்பன் அண்ணன் மாதையன் ஆகியோர்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி NCHRO ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியை சந்தித்து மனு அளித்தனர்.

திமுக ஆட்சிப்பொறுப்பில் அமைந்தது முதல் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏழு தமிழர்கள், இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்நிலையில் ஏழு தமிழர்கள், இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் மற்றும் வீரப்பன் அண்ணன் மாதையன் ஆகியோர்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி, அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின் தொகுப்பினை, NCHRO திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் Z.முஹம்மது தம்பி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. முஹம்மது ஜியாவுதீன் ஆகியோர் (3-7-2021) அன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் S.ரகுபதி அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வழங்கினர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *