குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் என்ன? – முப்படைகள் நீதிமன்றம் அறிக்கை!

Share this News:

புதுடெல்லி (14 ஜன 2022): குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து, IAF ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்தும் முப்படைகள் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

நாட்டின் முதல் சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 12 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி தமிழகத்தின் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.

“பள்ளத்தாக்கில் வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றம் காரணமாக மேகங்களுக்குள் நுழைந்ததன் விளைவாக விபத்து ஏற்பட்டது. இது விமானியின் இடஞ்சார்ந்த திசைதிருப்பலுக்கு வழிவகுத்தது, இதன் விளைவாக விபத்து ஏற்பட்டது” என்று இந்திய விமானப்படை (IAF) அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுபோன்ற விசாரணையின் முடிவுகளை ஐஏஎஃப் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது இதுவே முதல் முறை.

டிசம்பர் 8, 2021 அன்று நடந்த Mi-17V5 விபத்து குறித்து ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான முப்படைகள் விசாரணை நீதிமன்றம், அதன் ஆரம்பக் கட்ட விசாரணை விளக்க அறிக்கையை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இந்த மாத தொடக்கத்தில் சமர்ப்பித்தது.

அதன்படி “விசாரணைக் குழு, விமானத் தரவு ரெக்கார்டர் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆகியவற்றை ஆய்வு செய்தது. விபத்துக்கான சாத்தியமான காரணத்தைக் கண்டறிய அனைத்து சாட்சிகளையும் விசாரித்தது. மேலும், இயந்திரக் கோளாறு, நாசவேலை அல்லது அலட்சியம் ஆகியவை விபத்துக்கான காரணம் என்பதை விசாரணை நீதிமன்றம் நிராகரித்துள்ளது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *