இன்றும் அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை – பொதுமக்கள் கவலை!

Share this News:

சென்னை (25 மார்ச் 2022): பெட்ரோல் டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டர் தலா, 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சரக்கு வாகனங்களின் வாடகை கட்டணம் உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் பெட்ரோல், விலை இன்று லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.103.67 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்தது ரூ.93.71காசுகளுக்கும் விற்பனையாகிறது.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் பெட்ரோல் விலையில் ரூ.2.27 காசுகளும், டீசல் விலையில் ரூ.2.28 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *