சொந்த கட்சியையே கண்டிக்கிறாரே – அண்ணாமலையை உசுப்பேற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

Share this News:

சென்னை (21 நவ 2021): தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பாஜக நாளை போராட்டம் நடத்த உள்ளது.

இந்த போராட்டத்தை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என்னது, விலை உயர்வை கண்டித்து போராட்டமா? ஆனால், அதற்கு முழு காரணம் வரி உயர்வு தானே? அதுவும், அனைத்து வரி உயர்வையும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சி அதிமுகவும் தானே செய்தன அப்போது,ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் சொந்தக் கட்சியின் தேசியத் தலைமையையும், கூட்டாளிகளையும் கண்டிக்குறாரோ?” என்று பிடிஆர் கேள்வி எழுப்பி உள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *