தடை செய்யப்பட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்கு சவூதி அரசு கடும் எச்சரிக்கை!

Share this News:

ரியாத் (28 ஜூலை 2021): கோவிட் பரவல் காரணமாக தடை செய்யப்பட்டுள்ள நாடுகளுக்கு செல்லும் சவூதி நாட்டினருக்கு சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செவ்வாயன்று சவுதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவூதி நாட்டினர் தடைசெய்யப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்வது வெளிப்படையாக மீறுவதாகும்.

சவூதி அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களை மீறி பயணம் தடைசெய்யப்பட்ட நாடுகளுக்கு குடிமக்கள் பயணம் செய்வது குறித்து தகவல்கள் வந்துள்ளதாகவும், இதுபோன்ற மோசடி நிரூபிக்கப்பட்டால் சட்ட பொறுப்புணர்வு மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்பட நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் சவூதி அரசின் அறிவுறுத்தல்களை மீறியவர்கள் 3 ஆண்டுகள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோய் இன்னும் கட்டுப்படுத்தப்படாத நாடுகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயணிப்பதை தடை செய்துள்ள உள்துறை அமைச்சகம் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *