சித்திரை திருநாளை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜை!

Share this News:

நெல்லை (13 ஏப் 2020): சித்திரை திருநாளை முன்னிட்டு நாளை நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும் எனினும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

நாடு முழுவதும் கடந்த 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நாளை முடிவடைகிறது. இருப்பினும் மீண்டும் நாளை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே மக்கள் ஊரடங்கை மீறி வெளியில் செல்லாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் மக்கள் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் தான் வழிபாட்டு தலங்கள் கூட மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாளை சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் காலையில் நெல்லையப்பர் சுவாமி – ஸ்ரீ காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அன்னாபிஷேகமும், இரவு 7 மணிக்கு புதிய வருடத்துக்கான பஞ்சாங்கம் வாசித்தலும் நடைபெறுகிறது.

இருப்பினும் கொரோனா தொற்றால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் கோவிலில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொள்வர் என்றும் அவர்களும் சமூக இடைவெளியை பின்பற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *