நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கிக் கொண்ட பாஜக வேட்பாளரும் காங்கிரஸ் வேட்பாளரும்!

Share this News:

நாகர்கோவில் (18 மார்ச் 2021): கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விஜய் வசந்த் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் சந்தித்து, கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்,

கன்னியாகுமரி இடைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் எம்.பி. ஹெச். வசந்தகுமாரின் மகனும், திரைப்பட நடிகருமான விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் களம் காண்கிறார்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார். அங்கு பொன். ராதாகிருஷ்ணனும் எதேச்சையாக வந்தார்.

அப்போது நாகர்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் விஜய் வசந்த் – பொன். ராதாகிருஷ்ணன் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *