பாஜகவுக்கு இனி தொடர்ந்து கஷ்ட காலம்தான்- சிவசேனா தலைவர் சரமாரி தாக்கு!

Share this News:

மும்பை (05 ஜன 2020): “பாஜகவுக்கு இனி தொடர்ந்து கஷ்ட காலம்தான்!” என்று சிவசேனா தலைவரும் சாம்னா பத்திரிகையின் தலைமை செய்தியாளருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சஞ்சய் ராவத், “பாஜகவுக்கு மகாராஷ்டிராவில் கொடுத்த பாடம் போதாது என நினைக்கிறேன். இனி தொடர்ந்து அவர்கள் பாடம் புகட்ட வேண்டும். மகாராஷ்டிராவில் பாஜக சந்தித்த அவமானம் நாடெங்கும் சந்திக்க வேண்டும்.” என்றார்.

மேலும் “இந்த இந்திய நாடுதான் நமக்கு மதம், மதங்களை கடந்து மனிதத்துடன் வழ்வதை நாம் தொடர்வோம், பால்தாக்கரேவுக்கு பல முஸ்லிம்கள் நண்பர்களாக இருந்துள்ளனர். சிவசேனா கட்சி குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதில் நாட்டுக்கே முன்னுதாரணமாய் இருக்கும்” என்றார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *