சட்டசபைக்கு வித்தியாசமாக வந்த தமிமுன் அன்சாரி!

Share this News:

சென்னை (06 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் விதமாக சட்டசபைக்கு எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கருப்பு சட்டை அணிந்து வந்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாகை MLA-வும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி இன்று கருப்பு உடை அணிந்து வந்திருந்தார். மேலும் அவரது உடையில் CAA, NPR, NRC வேண்டாம் என குறிக்கும் வகையில் (NO CAA, NPR, NRC-என) எழுதப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவைக் கூடியதும், தனது கையில் தேசியக்கொடியுடன் வெளிநடப்பு செய்த தமிமுன் அன்சாரி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினார். அவரது முழக்கங்கள் தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் இன்று சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் கூட்டம் துவங்கியது. தமிழக அரசின் திட்டங்கள் குறித்து ஆளுநர் விளக்கம் அளித்தார். அப்போது ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி MLA-க்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *