காஷ்மீர் முன்னாள் முதல்வரின் தற்போதைய நிலை – ஸ்டாலின் கவலை!

Share this News:

சென்னை (28 ஜன 2020): காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் புகைப்படம் மிகுந்த வருத்தம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவருமான ஓமர் அப்துல்லாவின் தாடியுடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்டு வருத்தம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிரத்து செய்தது மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

அவர்களில் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவருமான ஓமர் அப்துல்லா ஒருவர். ஸ்ரீ நகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள. அவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் நீண்ட தாடியுன் தலையில் குல்லா அணிந்தவாறு காணப்படுகிறார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட தாடியுடன் உள்ள உமர் அப்துல்லா புகைப்படத்தை பகிர்ந்து, காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள உமர் அப்துல்லா புகைப்படம் வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், ஃபாரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களின் நிலையை எண்ணி சமஅளவில் அக்கறைப்படுவதாகவும் மற்றும் உரிய விசாரணை இன்று அடைக்கப்பட்டுள்ள மற்ற காஷ்மீர் தலைவர்கள் எண்ணி வருவத்தப்படுவதாகவும் தெரிவிள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *