வாசம் பிடித்த வாசன் – மோசம் போன தேமுதிக!

Share this News:

சென்னை (09 மார்ச் 2020): மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக ஜி.கே.வாசன் அறிவிக்கப்பட்டுள்ளது அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கு மேல்சபை எம்.பி. பதவிக்கான வாய்ப்பை வழங்கி இன்று அ.தி.மு.க. சார்பில் திடீரென அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தே.மு.தி.க.வுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தே.மு.தி.க., மேல்சபை எம்.பி. பதவியை கேட்டிருந்தது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த போதே அதற்கு உறுதியும் அளிக்கப்பட்டு இருந்தது. அனால் அ.தி.மு.க. தலைமை திடீரென இவ்வாறு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “த.மா.கா. தலைவர் ஜிகே வாசனுக்கு எம்பி சீட் வழங்கியது ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவு. கூட்டணிக் கட்சிகளை தி.மு.க. உதாசீனப்படுத்துவது போல் அ.தி.மு.க. செய்யாது. அரசியலில் கருத்து மோதல் இருக்கலாம், காழ்ப்புணர்ச்சி மோதல் இருக்கக் கூடாது. அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதியாக உள்ளது” என்றார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *