அத்தியாவசிய பொருட்கள் வாங்க மூன்று நாட்கள் மட்டுமே கெடு!

Share this News:

வேலூர் (08 ஏப் 2020): வேலூர் மாவட்டத்தில் மளிகை சாமான்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வாங்க முடியும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாகவும், பொதுமக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் விதமாகவும், வியாழன் (09.04.2020) முதல் வேலூர் மாவட்டத்தில் மளிகை கடைகள், சூப்பர் மார்கெட், டிப்பார்மென்டல் ஸ்டோர்கள் ஆகிய வாரத்தின் திங்கள், வியாழன், ஞாயிற்று கிழமைகளில் மட்டும் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டுமே இயங்கும்.

அதேபோல் காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் நேரம் குறைக்கப்பட்டு தினசரி காலை 6.00 முதல் காலை 10.00 வரை இயங்கும். மருந்து கடைகள் வழக்கம் போல் இயங்கும். பால் தினசரி காலை 6.00 முதல் காலை 8.00 மணி வரையும். மாலை 5.00 மணி முதல் மாலை 7.00 மணி வரையும் இயங்கும். அனைத்து வகை இறைச்சி கடைகளும் ஊரடங்கு முடியும் வரை திறக்க தடை. பெட்டிக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகள், சிறிய கடைகள் என எதற்கும் விதிவிலக்கு கிடையாது என வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *