சசிகலாவுக்கு புகழாரம் அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்டிய ஓபிஎஸ் இபிஸ்!

Share this News:

சென்னை (28 செப் 2020): சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் ,கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்

பரபரப்பான இந்த செயற்குழுவில் முதலமைச்சராக்கியது யார்? என ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல் எழுதியுள்ளது. தன்னை முதலமைச்சராக்கியது ஜெயலலிதா என ஓ.பி.எஸ். பேசியதாகவும் இருவரையுமே முதலமைச்சராக்கியது சசிகலாதான் என ஈபிஎஸ் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் வேட்பாளர் கருத்து மோதலை தள்ளிவைத்துவிட்டு கட்சியின் நலன் கருதி செயல்பட சில அமைச்சர்கள் வலியுறுத்தியுதகாவும் தகவல் வெளியாகியுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *