மக்கள் எங்களுக்கு ஆதரவு, தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவு :தேஜஸ்வி!

Share this News:

பாட்னா(12 நவ 2020): பிகாரில் தேர்தல் ஆணையத்தின் ஆதரவிலேயே பாஜக வெற்றி பெற்றதாக தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தலில் வாக்குகள் மெகா கூட்டணிக்கு ஆதரவாக இருந்தன, ஆனால் தேர்தல் ஆணையம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அஞ்சல் வாக்குகள் கணக்கிடப்படவில்லை என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம் ஏன் ரத்து செய்தது? மறுபரிசீலனை செய்வதற்கான கோரிக்கையை கூட தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்று தேஜஸ்வி மேலும் கூறினார்.

குறைந்தது 20 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி குறைவான வாக்குகளிலேயே பெரும்பான்மையைப் பெற்றுள்ளன என்றார் தேஜஸ்வி.

“எங்களுக்கு மக்களின் ஆதரவு கிடைத்தது, ஆனால் என்.டி.ஏ பணத்தால் வென்றது, ஆர்.ஜே.டி மிகப்பெரிய ஒற்றை கட்சியாக மாறுவதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரால் தடுக்க முடியவில்லை. இந்த நேரத்தில் பீகார் மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் மெகா கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தீர்கள். எவ்வாறாயினும், தேர்தல் ஆணையத்தின் முடிவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருந்தது. இது நடப்பது இது முதல் முறை அல்ல.2015 ஆம் ஆண்டிலும் பாஜக பின் கதவு வழியாக ஆட்சிக்கு வந்தது.” என்று தேரஜஸ்வி தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *