விவசாயிகளிடம் மண்டியிட்ட மத்திய அரசு!

Share this News:

புதுடெல்லி (01 டிச 2020): டெல்லியில் விவசாயிகளின் அனைத்து அமைப்புகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்ததை அடுத்து பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்தன.

ஆரம்பத்தில் விவசாய அமைப்புகளை பிளவுபடுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அமைப்புகளில் சில மட்டுமே விவாதத்திற்கு அழைக்கப்பட்டன, ஆனால் விவசாயிகள் அமைப்புகள் முழு விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகளையும் அழைத்த பின்னரே விவாதத்துடன் ஒத்துழைக்க முடிவு செய்தன.

இதைத் தொடர்ந்து, அனைத்து விவசாயிகள் அமைப்பினரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். இதனை அடுத்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *