பஞ்சாப் தேர்தலில் பாஜகவை பின்னுக்குத் தள்ளிய நோட்டா – பரபரப்பில் அமித் ஷா!

Share this News:

புதுடெல்லி (18 பிப் 2021) : பஞ்சாப் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் அடைந்த படுதோல்வியை அடுத்து பாஜக உயர்மட்டக் கூட்டத்தை கூட்டியுள்ளது.

இந்த கூட்டத்தில் பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உ.பி.யின் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பஞ்சாபின் பல பகுதிகளில், பாஜக வேட்பாளர்கள் நோட்டாவை கூட மிஞ்ச முடியவில்லை. இதுவரை தொடர்ந்து வெற்றி பெற்று வந்த பாஜகவின் முக்கிய கோட்டைகளில் நோட்டாவே பாஜகவை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளன.

பாஜகவை தொடர்ந்து அகாலிதளமும் பின்னடைவை சந்தித்துள்ளன.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *