13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெரியப்பா கைது!

Share this News:

சென்னை (29 ஜூன் 2021): 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, சிறுமியின் பெரியப்பா சென்னையில் கைது செய்யப் பட்டுள்ளார்.

தாய், தந்தையை இழந்த 13 வயது சிறுமி சென்னை வேப்பேரியில் தனது சித்தி வீட்டில் தங்கிருந்து எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

சமீபத்தில் திடீரென சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் சித்தி.

மருத்துவப் பரிசோதனையில் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்தி, சிறுமியிடம் விசாரித்தபோது அவர் எதுவும் சொல்லாமல் அழுதிருக்கிறார்.

இதையடுத்து வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் சித்தி.

மகளிர் போலீசார் துருவித் துருவி விசாரித்ததில், பெரியப்பா உறவு முறை கொண்ட விஸ்வநாதன் என்பவர் தனக்கு ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததைச் சொல்லி இருக்கிறார்.

ஓட்டேரி பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், தனது கடைக்கு சிறுமியை மிரட்டி அடிக்கடி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இப்படி கடந்த ஒரு வருடமாகச் செய்து வந்திருக்கிறார்.

இதையடுத்து விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *