துபாயில் கொரோனாவால் ஒரு மரணம் கூட இல்லாத நாள் இன்று!

Share this News:

துபாய் (03 செப் 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒரு மரணம் கூட நிகழவில்லை என்று சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாடும் தினமும் ஒருவரையாவது இழந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலைய்ல் கடந்த ஆண்டு நவம்பர் 14 அடுத்து துபாயில் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு கோவிட் மரணம் கூட பதிவாகவில்லை.

கடுமையான கோவிட் விதிகள் மற்றும் தீவிர தடுப்பூசி வழங்கல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம் கோவிட்டை அடக்குவதில் குறிப்பிடத்தக்க நன்மையைக் கொண்டுள்ளது.

கோவிட் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை 2043 பேர் இறந்துள்ளனர். நாளொன்றுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களில் ஆயிரத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் கோவிட் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை மற்றும் கவனிப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *