கொரோனா பரவல் – சிக்கலில் உதயநிதி ஸ்டாலின்!

Share this News:

சென்னை (04 செப் 2021): கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் நடத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் அதிகம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வரும் 15ஆம் தேதி வரை பல்வேறு சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனால் வரும் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட தமிழக அரசின் உத்தரவில், விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது விழா கொண்டாட அனுமதி மறுக்கப்படுகிறது. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி இல்லை. பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூரில் உதயநிதி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெறவுள்ள மராத்தான் போட்டிக்கு அனுமதி அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிக்கப்படாத நிலையில், மக்கள் அதிக அளவில் பங்கேற்கும் மராத்தான் போட்டிக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *