குவைத் மசூதிகளில் தொழுகையில் சமூக இடைவெளிக்கு விலக்கு!

Share this News:

குவைத் (22 அக் 2021): குவைத் மசூதிகளில் தொழுகையில் தோளோடு தோள் நின்று தொழ வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குவைத்தில் கொரோனா பரவலிலிருந்து ஓரளவுக்குக் கட்டுக்குள் உள்ள நிலையில், படிப்படியாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 22, தொழுகைகளில் இருந்து மசூதிகளில் சமூக தூரத் தேவையை விலக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல், ,தொழுகையின்போது ஒவ்வொரு விசுவாசிக்கும் இடையே ஒன்றரை மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதி விலக்கப்படும்.

இதற்கிடையே, வழிபாட்டாளர்களுக்கு தடுப்பூசி போடவும், முகமூடி அணியவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு நபரும் தங்கள் சொந்த முசல்லா அல்லது பிரார்த்தனை கம்பளத்தை கொண்டு வர வேண்டிய தேவையும் இருக்கும்.

கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்து வரும் சமூக இடைவெளி என்ற இந்த நிலை, இன்று முதல் மாறப்போகிறது. இதனால் மக்கள் சமூக இடைவெளியின்றி பிரார்த்தனை செய்வதில்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாட்டின் கோவிட் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கையை இயல்பாக்குவதற்கான ஐந்தாவது கட்டத்தை குவைத் பிரதமர் புதன்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *