பழைய செய்தித்தாளில் கோழி இறைச்சியை மடித்து கொடுத்த முஸ்லீம் கைது!

Share this News:

லக்னோ (05 ஜூலை 2022): உத்திர பிரதேசத்தில் பழைய செய்தித்தாளில் கோழி இறைச்சியை மடித்து கொடுத்த முஸ்லீம் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் சம்பாலில் தலிப் ஹூசைன் என்பவர் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவர் இந்து கடவுள்களின் படங்கள் அடங்கிய காகிதத்தில் கோழி விற்பனை செய்து வந்ததாக சிலர் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், தலீப் ஹூசைன் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்து தெய்வங்களின் படங்கள் அடங்கிய காகிதத்தில் கோழி இறைச்சியை விற்று மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி போலீசார் தலீப் ஹூசைனை கைது செய்தனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *