மங்களூரு ஆட்டோ மர்ம பொருள் வெடிப்பு விபத்து அல்ல – டிஜிபி தகவல்!

Share this News:

மங்களூரு (20 நவ 2022) மங்களூரு ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது விபத்து அல்ல என்று டிஜிபி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி என்ற பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்றில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவில் இருந்து எரிந்த நிலையில் குக்கரும் பேட்டரிகளும் கைப்பற்றப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறை இது பயங்கரவாத தாக்குதலோ என்ற நோக்கில் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இன்று காலை கர்நாடக மாநில டிஜிபி இதை தீவிரவாத தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், “கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் இருந்த மர்மப் பொருள் வெடித்தது விபத்து அல்ல, பெரிய பாதிப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது. மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் கர்நாடக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

முதல் கட்ட விசாரணையில் இந்த ஆட்டோ துர்கா பரமேஸ்வரி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இதில் பயணித்த நபரிடம் பிரேம் ராஜ் என்ற பெயரில் அடையாள அட்டை இருந்துள்ளது. இருப்பினும் இந்த அடையாள அட்டை உண்மை தானா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றன. ஆட்டோவில் பயணித்தவருக்கு 50 சதவீத காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பயங்கரவாத அமைப்புகளின் நிதி திரட்டலை தடுக்க புதிய திட்டம் – மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

சிகிச்சையில் உள்ள ஓட்டுநர் மற்றும் பயணி இருவராலும் தற்போது பேச முடியவில்லை. எனவே, அவர்கள் தேறிய பின்னர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற காவல்துறை திட்டமிட்டுள்ளது.

து மங்களூருவில் ஆட்டோ வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *