மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக எம்பி பத்ருத்தீன் அஜ்மல் மீது எதிர்கட்சிகள் புகார்!

Share this News:

கவுஹாத்தி (05 டிச 2020;): மத ஒற்றுமையை சீர்குலைப்பதாகக் கூறி அஸ்ஸாம் எம்பி பத்ருத்தீன் அஜ்மல் மீது எதிர் கட்சிகள் போலீசில் புகார் அளித்துள்ளன.

இந்துக்களும் முஸ்லிம்கள் போல் தங்கள் பிள்ளைகளுக்கு இளம்வயதிலேயே திருமணம் செய்துவைக்க வேண்டும்” என்று அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ரூதீன் அஜ்மல் யோசனை தெரிவித்துள்ளார்.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்தியாவில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவர வேண்டும். இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவை. இந்துக்களின் மக்கள்தொகை குறைந்து வருகிறது. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது” என்று கூறியிருந்தார்.

இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த பத்ருதீன் அஜ்மல், “முஸ்லிம் ஆண்கள் 20 முதல் 22 வயதில் திருமணம் செய்துவிடுகின்றனர். முஸ்லிம் பெண்கள் 18 வயதில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் இந்துக்கள் திருமணத்துக்கு முன்னரே இரண்டு, மூன்று பெண்களுடன் வாழ்கின்றனர். குழந்தை பெற்றுக் கொள்வதில்லை. சுகங்களைப் பெற்றுக் கொண்டு பணத்தை சேமிக்கின்றனர். 40 வயதுக்கு மேல்தான் அவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்.

40 வயதுக்கு மேல் எப்படி குழந்தை பெற்றுக் கொள்வது எளிதாகும். நல்ல வளமான மண்ணில் விதைக்கப்படும் விதைகளே பலன் தரும் பயிறாகும். அதனால் இந்துக்களும் முஸ்லிம்களின் நடைமுறையைப் பின்பற்றி தங்கள் பிள்ளைகளுக்கு ஆண்களாக இருந்தால் 20 முதல் 22 வயதிலும் பெண்களாக இருந்தால் 18 முதல் 20 வயதிலும் திருமணம் செய்துவைக்க வேண்டும். அப்புறம் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்று பாருங்கள்” என்று கூறினார்.

பத்ருத்தீன் அஜ்மல் கருத்துக்கு பலதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் சார்பில் பத்ருத்தீன் அஜ்மல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *