சவூதி வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பலி!

Share this News:

ரியாத் (17 டிச 2022): சவுதி அரேபியாவில் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் பகுதியில் உள்ள மஜ்ரிதா கவர்னரேட்டில் பெய்த மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிவில் பாதுகாப்பு குழு வெள்ளத்தில் இருந்து ஒருவரின் உடலை வெளியே எடுத்தது. மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சவுதி அரேபியாவில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேற்குப் பகுதியான ஜித்தா மற்றும் மக்கா பகுதிகளில் கடந்த வாரங்களில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *