குறைவான குற்றங்கள் மற்றும் அதிக பாதுகாப்புத் தரநிலைகளைக் கொண்ட உலகின் மிகப் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
ஒரு நாட்டில் நடைபெறும் குற்ற குறியீடுகள், பாதுகாப்பு குறியீடுகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அந்த நாட்டின் குற்றச்செயல்களின் அளவைக் கணிப்பதில் Numbeo நிறுவனம் புகழ் பெற்றது.
Numbeo நிறுவனம் 2025 ஆம் ஆண்டு இடைவருட பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இடம் பெற்ற 148 நாடுகளில், கத்தார் 84.6 என்ற பாதுகாப்பு மதிப்பெணுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த ஆய்வின் படி, அண்டோரா (Andorra), ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்தன. வளைகுடாவின் மற்ற நாடுகளான ஓமான் (ஐந்தாம் இடம்), சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் அனைத்தும் 15 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன. (- இந்நேரம்.காம்)
பட்டியலில் இந்தியா 67 ஆவது இடத்திலும், அமெரிக்கா 89 ஆவது இடத்திலும் இடம் பெற்றுள்ளன.
கடந்த 2024 ஆண்டிலும், Numbeo வெளியிட்ட கணக்கீட்டின்படி, கத்தார் உலகில் இரண்டாவது அதிக பாதுகாப்பு கொண்ட நாடாகவும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்ததாகவும் மதிப்பீடு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.
கத்தாரில் குற்றவியல் சட்டங்கள் கடுமையாக இருப்பதால் வீட்டுத் திருட்டு, வாகனத் திருட்டு, தனி மனிதத் தாக்குதல், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்கள் மிகக் குறைந்த அளவுகள் நடைபெற்றுள்ளது.
அதே நேரத்தில், நள்ளிரவு உட்பட பெண்கள், குடும்பங்கள் எவ்வித அச்சமும் இன்றி எந்நேரத்திலும் பொது இடங்களில் சுதந்திரமாக உலவுவதையும், பிள்ளைகள் பூங்காக்களில் பாதுகாப்பாக விளையாடுவதையும் கருத்தில் கொண்டு அதிகமான பாதுகாப்பு மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
(இந்நேரம்.காம்)
One thought on “உலகின் 3 பாதுகாப்பான நாடுகள் எவை தெரியுமா?”
Comments are closed.