குஜராத்தில் காங்கிரஸுக்கு மிகப்பெரிய சரிவு – காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!

அகமதாபாத் (04 ஜூன் 2020): குஜராத்தில் இரு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது எதிர் வரும் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள நான்கு ராஜ்யசபா பதவிக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டு முக்கியம். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கீர்த்தி படேல், லலித் வசோயா என்ற இரு எம்.எல்.ஏ..,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். முன்னதாக முதல்வர் விஜய் ரூபானியை அந்த…

மேலும்...

ஒரே நாளில் 260 பேர் பலி – இந்தியாவை அதிர வைக்கும் கொரோனா வைரஸ்!

புதுடெல்லி (045 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 லட்சத்து 16 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,16,919 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9304 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 260 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை…

மேலும்...

விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டது உண்மையா?

புதுடெல்லி (04 ஜூன் 2020): மோசடி மன்னன் விஜய் மல்லையா இந்தியா அனுப்பப்பட்டதாக வெளியான தகவலை இங்கிலாந்து மறுத்துள்ளது. வங்கி மோசடி செய்துவிட்டு லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையா, நேற்றிரவு மும்பை கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் பரவின. அங்குள்ள ஆர்தர் சாலை சிறையில் அவர் அடைக்கப்பட்டதாகவும் செய்திகள் உலா வந்தன. ஆனால், இதனை மல்லையாவின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் ரூ.9,961 கோடி கடன் ஏய்ப்பு செய்துவிட்டு லண்டனுக்கு…

மேலும்...

இந்தியா கொண்டு வரப்பட்டார் விஜய் மல்லையா – ஆர்தர் ரோடு சிறையில் அடைப்பு!

மும்பை (04 ஜூன் 2020): இந்தியா கொண்டுவரப்பட்ட விஜய் மல்லையா மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் 9,000 கோடி கடன் வாங்கி தொழிலதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்தார். அவருக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஏஜென்சிகள் மோசடி வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. லண்டனில் தஞ்சம் புகுந்த விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர சி.பி.ஐ. தீவிர…

மேலும்...

காட்டுப் பன்றிகளுக்காக வைக்கப்பட்ட வெடிமருந்தால் யானை கொல்லப்பட்டதா? – வனத்துறையினர் விசாரணை!

திருவனந்தபுரம் (04 ஜூன் 2020): கேரளாவில் காடுப்பன்றிகளுக்காக வைக்கப்பட்ட வெடிமருதால் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதா? என்று கேரள வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசுகளை நிரப்பி அதை யானையை உண்ணவைத்து கொன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கேரள வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் குறிப்பிடத்தக்க முக்கிய விபரங்கள் ஏதும் புலப்படவில்லை. ஏனெனில், யானைக்கு காயம்பட்டு 2 வாரங்களுக்கு பின்னரே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யானையை தான்…

மேலும்...

தப்லீக் ஜமாஅத்தினரை உடனடியாக விடுதலை செய்க – அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அலகாபாத் (03 ஜூன் 2020): தப்லீக் ஜமாஅத்தின் உறுப்பினர்களையும், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த மற்றவர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஷாத் அன்வர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்ற நீதிபதி சஷிகாந்த் குப்தா மற்றும் நீதிபதி சவுராப் ஷியாம் ஷம்ஷேரி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் திங்களன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில், இந்திய அரசியலமைப்பின் 21 வது…

மேலும்...

குவாரண்டீன் மையத்தில் பிறந்த குழந்தைக்கு குவாரண்டீனோ என பெயரிட்ட தம்பதிகள்!

இம்பால் (03 ஜூன் 2020): தனிமைப்படுத்தல் மையத்தில் பிறந்த குழந்தைக்கு குவாரண்டீனோ என்று பெயரிட்டு மகிழந்துள்ளனர் அந்த குழந்தையின் தம்பதிகள். மே 27 அன்று கோவாவிலிருந்து சிறப்பு ரயிலில் மணிப்பூர் வந்த பயணிகள் இமானுவேல் என்ற பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர் . அவர்களில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமாக இருந்த பெண் மீது மருத்துவர்களால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் “அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமை சிக்கல்கள் இல்லாமல் ஆண் குழந்தையை பிரசவித்தார். தாயும் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள்”…

மேலும்...

மகாராஷ்டிராவை புரட்டிப் போட்ட நிசர்கா புயல்!

மும்பை (03 ஜூன் 2020): மகாராஷ்டிராவை புரட்டிப் போட்ட நிசர்கா புயல் இன்று பிற்பகல் மகாராஷ்டிராவில் கரையைக் கடந்தது. அரபிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் பட்சத்தில் நிசர்கா (NISARGA) என்று பெயரிடப்பட்டது. இது இன்று பிற்பகல் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் மகாராஷ்டிராவில் ரையக் கடந்தது. புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு…

மேலும்...

முஸ்லிம்கள் மீது விஷக்கருத்தை பரப்பிய – மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானியின் உரிமைத்தை ரத்து செய்ய கோரிக்கை!

கான்பூர் (02 ஜூன் 2020): முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் கொரோனாவை பரப்பியவர்கள் அவர்கள்தான் என்றும் விஷக்கருத்தை பரப்பிய டாக்டர் ஆர்த்தி லால்சந்தானியின் மருத்துவர் உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினராலும் ஊடகங்களாலும் அவதூறு பரப்பட்டன. இந்நிலையில் முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக ஒரு மருத்துவரே பேசியுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து ஆர்த்தி லால்சந்தானி கூறுகையில் “முஸ்லிம் கொரோனா நோயாளிகள்…

மேலும்...

பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்த தப்லீக் ஜமாத்தினர் பட்டியல் அரசிடம் ஒப்படைப்பு!

ஐதராபாத் (02 ஜூன் 2020): கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்த 38 தப்லீக் ஜமாத்தினர் பட்டியலை தெலுங்கானா அரசிடம் அசாதுத்தீன் உவைசி ஒப்படைத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதித்து மீண்ட தப்லீக் ஜமாத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிறருக்கு பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 38 தப்லீக் ஜமாத்தினர் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர்களைப் பற்றிய பட்டியல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஐதராபாத் எம்.பி.யும், AIMIM…

மேலும்...