நிசார்கா புயல் எச்சரிக்கை – 115 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்!

மும்பை (02 ஜூன் 2020): தென் மேற்கு அரபிக்கடலில் உருவாக்கியுள்ள நிசார்கா புயல் நாளை மகாராஷ்டிரா மற்றும் குஜாராத் இடையே கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிசார்கா புயல் கோவாவுக்கு 280 கி.மீ தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 490 கி.மீ தொலைவிலும், குஜராத்தில் இருந்து 710 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்- டாமன் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிசார்கா புயல் காரணமாக,…

மேலும்...

ஒரே நாளில் 103 பேர் பலி – கொரோனாவால் திக்குமுக்காடும் மகாராஷ்டிரா!

மும்பை (02 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகராஷ்டிரா. அங்கு இன்று ஒரே நாளில் மட்டும் 103 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,600-ஐ கடந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு…

மேலும்...

இந்தியாவை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா – பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது!

புதுடெல்லி (02 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,600-ஐ கடந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 96,000-ஐ கடந்தது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு…

மேலும்...

டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி திடீர் நீக்கம்!

புதுடெல்லி (02 ஜூன் 2020): டெல்லி பாஜக தலைவராக இருந்த மனோஜ் திவாரி டெல்லி பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மனோஜ் திவாரிக்கு பதிலாக, முன்னாள் வட டெல்லி மாநகராட்சி மேயரான ஆதேஷ் குப்தா டெல்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2016 ல் டெல்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட மனோஜ் திவாரியின் செயல்பாடுகள்தான் , பிப்ரவரி மாதம் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் படுதோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. அதேபோல சத்தீஸ்கரில் விஷ்ணு தியோ சாய் தலைவராகவும்,…

மேலும்...

இந்தியாவின் அந்நிய முதலீட்டில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

புதுடெல்லி (02 ஜூன் 2020): இந்தியாவின் கடன் தரத்தை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மூடிஸ் நிறுவனம். மீண்டும் குறைத்துள்ளதால் இந்தியாவின் அந்நிய முதலீட்டில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உலகின் முன்னணி பொருளாதார தரநிர்ணய நிறுவனமான மூடிஸ், ஒவ்வொரு நாட்டின் பொருளாதார சூழலை பொறுத்து, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு, கடன் பெறும் தரம், தொழில் வளர்ச்சி, உள்ளிட்டவற்றை பட்டியலிடும். அந்த வகையில் இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தை கருத்தில் கொண்டு, நமது சர்வதேச…

மேலும்...

ஊரடங்கு காலத்தில் சிஏஏ எதிர்ப்பாளர்களை கைது செய்வதா? – எதிர் கட்சிகள் கடும் கண்டனம்!

புதுடெல்லி (02 ஜுன் 2020): நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்களை கைது செய்வதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கொரோனா பவலாலும், ஊரடங்காலும் நாடே பெரும் சோதனை காலத்தில் உள்ளது. இந்நிலையில் அவசியமில்லாமல் சிஏஏ எதிர்ப்பு மாணவர்களை டெல்லி போலீஸ் கைது செய்து வருகிறது. இதற்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக உலகம் இப்போது உள்ள சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதை கூட்டாக கண்டிக்க…

மேலும்...

கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம் மத குருமார்கள்!

முர்ஷிதாபாத் (02 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் இமாம்கள் அப்பகுதியில் ஊர் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுகும் மக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர். ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர்களின் ஊர்களுக்கு திரும்பி வந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில் ஊர் வரும் இளைஞர்கள் பலர் கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இப்பதாக மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் மாவட்ட  இமாம்களுக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதி இமாம்கள் மீது…

மேலும்...

இறந்த தாயை எழுப்பும் குழந்தை – வைரலான குழந்தைக்கு உதவும் ஷாரூக்கான் அறக்கட்டளை!

மும்பை (01 ஜூன் 2020): பீகார் முசாபர்பூர் ரயில்வே சேஷனில் இறந்த தாயை எழுப்ப முயற்சிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில் அந்த குழந்தைக்கு உதவ நடிகர் ஷாருக்கானின் ‘மீர் அறக்கட்டளை’ முன்வந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு செல்வதில் மிகவும் அவதிபட்டனர். பலர் கால்நடையாக நடந்தே ஊருக்கு சென்றனர். இதில் பலர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். அந்த வகையில் தாமதமாக அரசு அறிவித்த…

மேலும்...

பாஜக தலைவருக்கு கொரோனா வைரஸ் (கோவிட் 19) பாதிப்பு!

ஐதராபாத் (01 ஜூன் 2020): தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானாவின் மூத்த பாரதிய ஜனதா தலைவர் (பிஜேபி) தலைவர் சிந்தலா ராமச்சந்திர ரெட்டி சில அறிகுறிகளுடன் கோவிட் -19 பரிசோதனை செய்த நிலையில் அவருக்கு பாசிட்டிவ் என முடிவுகள் வந்ததை அடுத்து அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கைராதாபாத் முன்னாள் எம்.எல்.ஏ ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு…

மேலும்...

முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக மருத்துவரின் வெறுப்பூட்டும் பேச்சு -அதிர்ச்சி வீடியோ!

கான்பூர் (01 ஜூன் 2020): முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக கான்பூர் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானி பேசிய பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினராலும் ஊடகங்களாலும் அவதூறு பரப்பட்டன. இந்நிலையில் முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக ஒரு மருத்துவரே பேசியுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து ஆர்த்தி லால்சந்தானி கூறுகையில் “முஸ்லிம் கொரோனா நோயாளிகள் வைரஸ் பரப்ப…

மேலும்...