ஒன்றிய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற சுகாதாரக் குழு பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (13 செப் 2022): இந்தியாவில் கோவிட் பாதிப்பால் அதிகமானோர் உயிரிழக்க ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே கரணம் என்று நாடாளுமன்ற சுகாதாரக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. நாடாளுமன்ற சுகாதார நிலைக்குழு தனது 137வது அறிக்கையினை திங்கள்கிழமை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தது. அதில் , “கோவிட்டால் உலகிலேயே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது.கோவிட்-19 இன் இரண்டாவது அலையின் போது, ​​நாட்டின் சுகாதார அமைப்புகள் முற்றிலும் சீர்குலைந்தன. இதனால் கோவிட் பாதிப்பு அதிகரித்து இறப்புகள் அதிகரித்தன,…

மேலும்...

மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகள் திட்டம் – நிதின் கட்கரி

புதுடில்லி:”லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் செல்வதற்காக மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது,” என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். இந்திய – அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பின் சார்பில் புதுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்கரி பேசியதாவது:ஒரு சில வெளிநாடுகளில் இருப்பது போல், நம் நாட்டிலும் மின்மயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த…

மேலும்...

மூன்று கிலோமீட்டர் ஓடிச்சென்று அவசர அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்!

பெங்களூரு (12 செப் 2022): சில மருத்துவர்களின் செயல்கள் மிகவும் மெச்சத்தகுந்ததாக இருக்கும் அப்படி ஒரு மருத்துவர் சாலையில் ஓடிச்சென்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டுள்ளார். டாக்டர். கோவிந்த் சர்ஜாபுரா சாலை மணிப்பால் மருத்துவமனையில் காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் ஆக உள்ளார். இந்நிலையில் பித்தப்பை நோயால் கடுமையான வலியால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு அவசர அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டது. அதன்படி மருத்துவர் கோவிந்த் மருத்துவமனையை நோக்கி அவரசமாக காரில் சென்றார். மருத்துவரின் கார் சர்ஜாபுரா-மரத்தஹள்ளி சாலையில் வந்தபோது போக்குவரத்தில் சிக்கியது. ஆனால் போக்குவரத்து…

மேலும்...

ஞானவாபி மசூதி விவகாரம் குறித்த தீர்ப்பு – இந்து பெண் மனுதாரர் நடனமாடி கொண்டாட்டம்!

வாரணாசி (12 செப் 2022): ஞானவாபி வழக்கில் இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்று உறுதி செய்த வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு மனுதாரர்காளில் ஒருவர் நடனமாடி கொண்டாடியுள்ளார். நடனமாடினார். இதற்கு பதிலளித்த மனுதாரர் மஞ்சு வியாஸ், இந்து சகோதர சகோதரிகள் இன்று தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும். உத்தரபிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதியில் தினசரி வழிபாடு நடத்த அனுமதி கோரி ஐந்து பெண்கள் மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்கக்கூடாது என்ற…

மேலும்...

ஞானவாபி மசூதி விவகாரம் – முஸ்லிம்களின் கோரிக்கை நீதிமன்றம் நிராகரிப்பு!

வாரணாசி (12 செப் 2022): உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை எதிர்த்து முஸ்லிம்கள் ஒருதரப்பினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த…

மேலும்...

சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள் அடித்துக்கொலை!

ஷில்லாங் (12 செப் 2022): மேகாலயாவில் சிறையில் இருந்து தப்பிய நான்கு விசாரணைக் கைதிகளை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. மேகாலயாவின் ஷில்லாங்கில் உள்ள ஜோவாய் சிறையில் இருந்து செப்டம்பர் 10ஆம் தேதி தப்பியோடிய ஆறு விசாரணைக் கைதிகளில் 4 பேர் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின் ஷாங்பங் கிராமத்தில் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், குழு ஒரு தேநீர் கடையை அடைந்தபோது, ​​உள்ளூர்வாசிகள் கைதிகளில் ஒருவரை அடையாளம் கண்டுகொண்ட கிராம மக்கள்…

மேலும்...

ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு

வாரணாசி (12 செப் 2022): வாரணாசி ஞானவாபி மசூதி தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை எதிர்த்து முஸ்லிம்கள் ஒருதரப்பினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி…

மேலும்...

இந்து கடவுள்களை கேலி செய்தேனா? – காமெடி நடிகர் சவால்!

புதுடெல்லி (11 செப் 2022): இந்து கடவுள்களை கேலி செய்ததை நிரூபிக்குமாறு விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா சவால் விடுத்துள்ளார். நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவின் நிகழ்ச்சி குருகிராமில் நடைபெறவிருந்த நிலையில், குணால் இந்துக்களை இழிவுபடுத்துவதாகக் கூறி விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவை குருகிராம் நிர்வாகத்திடம் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு வெள்ளிக்கிழமை புகார் அளித்தன. இதையடுத்து, செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஸ்டுடியோ சா பாரில்…

மேலும்...

மஹாவீர் அகாரா பேரணியில் முஸ்லிம்கள் வீடுகள், மசூதிகள் மீது குறிவைத்து தாக்குதல்!

பாட்னா (11 செப் 2022): பிகாரில் மஹாவீர் அகாரா பேரணியின் போது இந்துத்துவா வன்முறை கும்பலால் முஸ்லிம்கள் வீடுகள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளன. பீகாரின் சிவான் மாவட்டம் பர்ஹாரியாவில் நடந்த மஹாவீர் அகாரா பேரணியின் போது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.வன்முறையின்போது முஸ்லிம்கள் வீடுகள், மற்றும் மசூதிகள் மீது வன்முறையாளர்கள் கல் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் . மேலும் பல வீடுகளில் கொள்ளை நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல வீடுகளும் கடைகளும்…

மேலும்...

கேள்விக்குறியாகும் முஸ்லிம் மாணவிகளின் கல்வி – பியுசிஎல் கவலை!

பெங்களூரு (10 செப் 2022): கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் மாநில அரசின் நடவடிக்கையாலும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாலும் கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பான, ‘சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம்’ கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பியூசிஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசின் உத்தரவும், அதனை வழிமொழிந்துள்ள நீதிமன்ற உத்தரவையும் மேற்கோள் காட்டி, உயர் நீதிமன்ற தீர்ப்பு, பாரபட்சமற்ற கல்வி உரிமை, சமத்துவ உரிமை,…

மேலும்...