ஜூன் 21 ஆம் தேதி முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் சவூதி அரேபியா!

ரியாத் (20 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில் ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு சவூதி அரேபியா இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இதுகுறித்து சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜுன் 21 2020 முதல் அனைத்து பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகள் இயங்கும். ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தல் அவசியமாகும். வெளிநாட்டு விமான…

மேலும்...

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இந்தியன் சோசியல் ஃபாரம் ஏற்பாடு செய்த ஆன்லைன் நிகழ்ச்சி!

ஜித்தா (19 ஜூன் 2020): உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இந்தியன் சோசியல் ஃபாரம் ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. வெளிநாட்டிலுள்ள இந்திய சமூகத்தின் சமூக நல அமைப்பான இந்தியன் சோசியல் ஃபாரம் இரத்த நன்கொடையாளர்கள் குழு (ஐ.எஸ்.எஃப்) 5 ஆண்டுகளாக இரத்த தானத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டில் ‘நன்கொடையாளர்கள் பூங்கா (Donor’s Park)’ ரத்த தானம் வழங்கும் குழு மற்றும் ஒரு குறிப்பிட்ட இரத்த தேவைகளின் அடிப்படையில் இரத்த தானம்…

மேலும்...

கொரோனா காலத்தில் ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட முதல் விமானம் – வழியனுப்பிய தமுமுகவினர்!

ஜித்தா (06 ஜூன் 2020): கொரோனா காலத்தில் ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில் சென்ற 151 தமிழர்களை தமுமுக தன்னார்வலர்கள் வழியனுப்பி வைத்தனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் முதல் விமானம் ஜித்தாவிலிருந்து சென்னைக்கு பகல் 3 மணியளவில் 32 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 151 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. ஜித்தா இந்திய தூதரக அதிகாரிகள் ஹம்னா மரியம் மற்றும் அம்ஜத் ஆகியோர் ஏற்பாட்டில், ஜித்தா தமிழ் சங்கம் (JTS) சிராஜூதீன், ரமணா மற்றும் ஜித்தா…

மேலும்...

ஜித்தா இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான VFS Global அலுவலகம் ஜூன் 3 முதல் திறப்பு!

ஜித்தா (29 மே 2020): ஜித்தா இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான VFS Global அலுவலகம் ஜூன் 3 முதல் இயங்கும் என்று இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்திய தூதரகம் தொடர்பான பணிகள் (அவசர தேவைகள் தவிர) நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரங்கு படிப்படியாக குறைக்கப்படவுள்ள நிலையில், இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான ஜித்தா ஹைல் சாலை VFS Global அலுவலகம் வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல் இயங்கும். மேலும்…

மேலும்...

கொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்!

ஜித்தா (28 மே 2020): கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த திருப்பூர் பல்லடத்தைச் சார்ந்த தமிழர் (வயது 53), 23-5-2020 அன்று சிகிச்சை பலனின்றி சவுதி அரேபியா, ஜித்தாவில் மரணமடைந்தார். அவரது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை இந்தியன் சோசியல் ஃபோரத்தின் ஜித்தா தமிழ் மாநில நிர்வாகிகள் ஊரடங்கின் போதும் முன்னின்று செய்தனர். இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் சட்ட ரீதியான அனைத்து ஆவணங்களையும் அரசு அதிகாரிகளிடம் சமர்பித்து குறுகிய நேரத்தில் நல்லடக்கம் செய்வதற்கான…

மேலும்...

கலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா!

ஜித்தா (28 மே 2020): கொரோனோ நுண்கிருமி தொற்று பேரிடர் 24 மணி நேர ஊரடங்கில்… விடுமுறை காலத்தில்… ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் நடத்திய விகடகவி 2.0 எனும் நகைச்சுவை கலந்துரையாடல் நிகழ்ச்சியான Lockடவுன் கலாட்டா நிகழ்ச்சி நடந்தது. சென்ற டிசம்பர் மாதம் ஜெத்தா மாநகரில் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் நடத்திய மாபெரும் நிகழ்ச்சியான விகடகவியில் நவீன விகடகவி எனும் விருதினைப் பெற்ற கலக்கப் போவது யாரு சீசன் 7 இன் வெற்றியாளர் அசார் மீண்டும் இந்த…

மேலும்...

இயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்!

துபாய் (27 மே 2020): கோவிட் 19 விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம் துபாய் இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ரம்ஜான் பண்டிகை விடுமுறை முடிவுற்ற நிலையில் இன்றிலிருந்து துபாயில் பொது வாழ்க்கை மற்றும் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஐம்பது சதவீத ஊழியர்கள் தொழிலாளர் அமைச்சகத்தினால் அலுவலகங்களுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இது 30 சதவீதமாக இருந்தது. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மேலும் 30 சதவீதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க…

மேலும்...

அபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்!

அபுதாபி (24 மே 2020): ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் உள்ள பள்ளியில் பணிபுரிந்த மூத்த இந்திய ஆசிரியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். 50 வயதான ஹிந்தி ஆசிரியர், கடந்த மே 7ம் தேதி இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நோய்த் தொற்றால் இன்று (மே 24) பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், ஹிந்தி ஆசிரியர் கையாண்ட வகுப்புகளுக்கு ஆக்கப்பூர்வமான அம்சத்தை கொண்டு…

மேலும்...

சவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்!

ரியாத் (22 மே 2020): சவூதியில் ரம்ஜான் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிமை மாலை ஷவ்வால் பிறை தென்படாததை அடுத்து சனிக்கிழமை நோன்பு கடைபிடிக்கப்படும். மேலும் ஞாயிற்றுக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று சவூதி நாளிதழ் அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனையே வளைகுடா நாடுகள் அனைத்தும் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்...

இஸ்லாத்திற்கு எதிரான கருத்து – துபாயில் மேலும் ஒருவர் மீது நடவடிக்கை!

துபாய் (19 மே 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்திற்கு எதிரான நச்சுக் கருத்தை பரப்பியதற்காக, மேலும் ஒரு இந்தியர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகள் உலக அளவில் பேசுபொருளாகி உள்ளன. சமீபத்தில் அரபு நாடுகளின் முக்கியப் பிரமுகர்கள், அரச பின்னணி கொண்டவர்கள் இந்திய அரசினைத் தொடர்பு கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு தெரிவித்திருந்தனர். அரபு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும், இவ்வாறான வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் காழ்ப்புணர்ச்சிப் பதிவுகள்…

மேலும்...